ஏமாற்று

ஆறு பேரின் $2.85 மில்லியனுக்கும் அதிகமானத் தொகையை மோசடி செய்த , 47 வயது முரளிதரன் முகுந்தனுக்கு மே 9ஆம் தேதி எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உறவினர் ஒருவருக்கு நிறுவனத்தை ஏமாற்ற மலேசியரான கோ சென் நிங் துணைபோனார்.
காப்புறுதி நிறுவனத்தை ஏழு ஆண்டுகளாக ஏமாற்றிய 46 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான சுயாண்டி என்பவருக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 29) பத்து ஆண்டு, பத்து மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2010 மே முதல் 2017 செப்டம்பர் வரை அவர் போலியாக கோரிக்கைகளை விடுத்து 10.7 மில்லியன் வெள்ளிக்கு மேல் ஏமாற்றியிருக்கிறார்.
திருச்சி: திருச்சி முன்னாள் சார்-பதிவாளர் ஜானகிராமன் (79), அவரது மனைவி வசந்தி (65) ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியின் பல்வேறு பகுதிகளில் 1989 முதல் 1993 வரை சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார் ஜானகிராமன். ஜானகிராமன் பணியாற்றிய காலத்தில் தனது பெயரிலும் மனைவி வசந்தி பெயரிலும் ரூ.32.25 லட்சத்தில் சொத்து வாங்கியுள்ளார்.
ஏமாற்றியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஏற்கெனவே ஆறு ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் வழக்கறிஞருக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.